பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் செலவினப்பார்வையாளர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இத்தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக துக்ரியாவும், துறையூர், குளித்தலை, முசிறி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக நீரஜும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர்.
இதில், தேர்தல் செலவினப் பார்வையாளர் துக்ரியா செவ்வாய்க்கிழமையும், நீரஜ் புதன்கிழமையும் பெரம்பலூருக்கு வருகை தந்து தங்களது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.