பெரம்பலூர்

பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

DIN

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, தகுதியான முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே,  மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குள்பட்ட நல்ல உடல் திறனுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள், தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர்- 621 704 எனும் முகவரியில் நேரில் அணுகவும். 
மேலும் விவரங்களுக்கு 04329 - 221011 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT