பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்

பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி கொண்டுவரப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி. 

பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி கொண்டுவரப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி. 
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
 பெரம்பலூர் தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவேன். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான ரயில் போக்குவரத்து வசதியை நிறைவேற்றுவேன். தற்போது, ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்த பின்னர் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார் வேட்பாளர் என்.ஆர். சிவபதி.
அதிமுக  மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி,  முன்னாள் எம்பி இளவரசன்  முன்னிலை வகித்தனர்.  
 கூட்டத்தில், பாஜக கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன், பாமக மாவட்டச் செயலர் க. செந்தில்குமார், தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்டத் தலைவர் பாலாஜி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் உள்பட பலர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com