கந்தர்வகோட்டை தாலுகா சுந்தம்பட்டி வட்டம் வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள மாமுண்டி கருப்பர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் திருப்பணி முடிந்து, கிராமத்தினர் சார்பாக குடமுழுக்கு நடத்த முடிவானது.
இதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹீதி, தீபாரதனை பிரசாதம் வழங்குதல் முடிந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. பின் முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்று, கடம் புறப்பாட்டு மூலஸ்தான ஆலய கும்பத்தில் புனிதநீரை குருக்கள் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.