விராலிமலை அருகே சுமை ஆட்டோ  கவிழ்ந்து பெண் சாவு

விராலிமலை அருகே புதன்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்தார்.

விராலிமலை அருகே புதன்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள ஆவூர் பிடாரம்பட்டியில் இரு ந்து களமாவூரில் புதன்கிழமை நடைபெற்ற காதணி விழாவிற்கு சிலர் சுமை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பிடாரம்பட்டி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமை ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் பிடாரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்(45) உயிரிழந்தார். மேலும், அதே ஊரைச் சேர்ந்த 15 பேர் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மாத்துர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com