டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 7,804 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2க்கான எழுத்துத் தேர்வை 7,804 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2க்கான எழுத்துத் தேர்வை 7,804 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி 2 பதவிக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 10,365 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 7,804 பேர் எழுதினர். 2,565 பேர் தேர்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 23 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த  41 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பெருமாநாடு சுதர்சன் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் நேரில் பார்வையிட்டார். மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் குழுவினர் தேர்வை கண்காணித்தனர். தேர்வெழுதியவர்கள் மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com