தீவிபத்து: வீட்டின் மேற்கூரை எரிந்து சேதம்

பொன்னமராவதியில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் வீட்டின் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

பொன்னமராவதியில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் வீட்டின் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் சிவராஜ குருக்கள். இவரது வீட்டின் அருகே சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்தபோது  அதன் தீப்பொறி சிவராஜகுருக்கள் வீட்டின் மாடியில் உள்ள கூரையில் பட்டு தீப்பற்றியது. 
தகவலின் பேரில் அங்கு சென்ற பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் வீட்டின் மேற்கூரை மற்றும் தளவாடச் சாமான்கள் எரிந்து சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com