பொன்னமராவதி அருகே கேசராபட்டி காசிலிங்கபாளையம் ரணகாளிமுத்தம்மன் உடனாகிய சுயம்பு ஆதிசிவன் கோயிலில் சுவாமி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு விழா நவ.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, மேளதாளத்துடன் ரணகாளிமுத்தம்மன் சுவாமி கோயிலில் தொடங்கிய ஊர்வலம் கேசராபட்டி, உலகம்பட்டி, கண்டியாநத்தம், புதுப்பட்டி, பொன்னமராவதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்றது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கணக்கன்பட்டி சற்குரு பழனிச்சாமி சித்தர் பீட அன்பர்கள், கேசராபட்டி காசிலிங்கபாளையம் பொதுமக்கள் செய்திருந்தனர்.