கோட் டைப்பட்டினத்தில் பூட்டிய வீட்டை திறந்து பீரோவில் இருந்த தங்க நகை, பணம் திருடப்பட்டது.
அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் தாஜ்மகால் நகரைச் சேர்ந்தவர் நூர்தீன். ஒலிபெருக்கி அமைப்பாளரான இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சென்றார்.
இந்நிலையில், வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.
வீட்டின் கதவை உடைத்து 120 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டதாக கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு 49 பவுன் தங்க நகை திருடு போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.