புதுக்கோட்டை மாவட்டம் குப்பையன்பட்டியில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 20) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குப்பையன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.20) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளித்தும், அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றும் பயனைடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.