கந்தர்வகோட்டை அருகே கஜா புயலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த புதுநகர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மனைவி சந்திரா(45). இவரது தோட்டத்தில் வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலின் தாக்கத்தால் தனது தோட்டத்து வாழைப்பயிர்கள் சேதமடைந்திருக்குமோ என்ற அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா திங்கள்கிழமை உயிரிழந்தார்.