அறந்தாங்கியில் மின்விநியோகம் செய்யக்கோரி பாரதியார் தெரு, பிள்ளைத்தெரு வாசிகள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திங்கள் கிழமை இரவு பச்சைகாளியம்மன் கோயில் அருகே முன்னாள் திமுக கவுன்சிலர் சின்ன அப்பு தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் சி.பாலமுருகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.