ஆவுடையார்கோவிலில் திருவாசக திருநெறி திருமுழக்கம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை மதுரவயல் சிவபுரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிவபுரம் திருத்தொண்டர் திருமன்ற தம்பிரான் தோழர் கபிலனார் தலைமை வகித்தார். அறக்கட்டளை அறங்காவலர்கள் கமலநாதன், சிவதாபிரதீபா, சிவபோக கிருத்திகா, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவிளக்கு ஏற்றுதல், திருப்பள்ளி எழுச்சி உறுதிமொழி, பஞ்சாட்சர தியானம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, மாணிக்கவாசகரின் காலமும், கருத்தும் என்ற ஆய்வு நூலை முனைவர் பத்மாவதி எழுதி சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் வெளியிடப்பட்ட நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளவை குறித்து சிவதொண்டர்கள் பேசினர்.