வங்கி ஊழியர்  கூட்டமைப்பினர்  ஆர்ப்பாட்டம்

பரோடா வங்கி, விஜயா, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவைக்

பரோடா வங்கி, விஜயா, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஐக்கிய வங்கிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற  ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமதுரை, மாவட்ட வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com