புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் புதன்கிழமை மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.
வடகாடு ஊராட்சி தெற்குப்பட்டியைச் சேர்ந்த குழந்தையன் மனைவி நாடியம்மாள் (45). இவர், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மழை பெய்ததால் அருகிலிருந்த மரத்தடியில் நின்றுள்ளார்.
அப்போது, மின்னல் தாக்கி மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வடகாடு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாடியம்மாள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.