பொன்னமராவதி பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் விடுமுறை வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை பொன்னமராவதி சிஐடியு கிளை வலியுறுத்தி வந்தது. அதன்படி புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் வ. சுலைமான் சேட் முன்னிலையில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முக்கிய கோரிக்கையான துப்புரவு பணியாளர்களுக்கு முழுநாள் விடுமுறை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்டத் தலைவர் ப. சண்முகம், கிளைச் செயலர் அ. தீன், துணைத் தலைவர் அ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.