புதுக்கோட்டை

பொன்னமராவதியில் துப்புரவு ஊழியர்களின்  கோரிக்கை ஏற்பு

DIN

பொன்னமராவதி பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு ஊழியர்களுக்கு  வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் விடுமுறை வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை பொன்னமராவதி சிஐடியு கிளை வலியுறுத்தி வந்தது. அதன்படி புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் வ. சுலைமான் சேட் முன்னிலையில் நடைபெற்ற  சமரச கூட்டத்தில் முக்கிய கோரிக்கையான துப்புரவு பணியாளர்களுக்கு முழுநாள் விடுமுறை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்டத் தலைவர் ப. சண்முகம், கிளைச் செயலர் அ. தீன், துணைத் தலைவர் அ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT