கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு தென்னையில் மதிப்புக் கூட்டுதல், நீராபானம் தயாரிப்பு பற்றிய பயிற்சி வெள்ளாளவிடுதி கிராமத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் மு. சங்கரலெட்சுமி தலைமை வகித்தார். துணை வேளாண்மை இயக்குநர் கணேசன்,வேளாண் உதவி இயக்குநர் சங்கரலட்சுமி,வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, சுப்பிரமணியன், பயிர் அறுவடைப் பரிசோதனை அலுவலர்கள் கார்த்திக், அன்பரசன்,அறந்தாங்கி வட்டார விவசாயி பாலகிருஷ்ணன் மற்றும் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்கள் சிபி சக்கரவர்த்தி , விவேகானந்தன், ரமேஷ், வசந்தகுமார், ஸ்ரீதர், சக்திவேல், ரூபன்சீயன்னா,சக்திவேல்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் செய்தார்.