அரசு பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரசாரம்

கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை, தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்த தேசியளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி


கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை, தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்த தேசியளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து மீட்டெடுத்து வலிமையானவர்களாக மாற்ற உறுதியேற்றனர்.
கந்தர்வகோட்டை இந்திராநகர், குமரன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் பாஸ்கர், முத்துக்கண்ணு , அடைக்கலமேரி, புஷ்பலதா, சமையலர் உதவியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com