அறந்தாங்கி அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மாலை பைக்கில் சென்றவர் லாரி மோதி உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மாலை பைக்கில் சென்றவர் லாரி மோதி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம், ஆவணம் எல்.என். புரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் ஆத்மநாதன் (46). இவர் பைக்கில் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் என்ற இடத்தில் வழியே
சென்றபோது செங்கல் ஏற்றி வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சி. பாலமுருகன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com