இலுப்பூர் அருகே தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம்

இலுப்பூர் அருகேயுள்ள விளாப்பட்டியில் செயல்படும் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றம், புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் ரிலையன்ஸ்


இலுப்பூர் அருகேயுள்ள விளாப்பட்டியில் செயல்படும் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றம், புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை, இலுப்பூர் பேரூராட்சி இணைந்து தூய்மையே சேவை என்னும் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் தூய்மை உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதியேற்றனர்.
இலுப்பூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, சுவட்ச் பாரத் திட்ட பொறுப்பாளர் சத்யா, சிறப்பு அழைப்பாளர்கள் சின்னத்தம்பி, ஆசிரியர் ரவிச்சந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேரணியாக புறப்பட்ட இக்குழுவினர் கடைவீதி மற்றும் வீதிகள் வழியாக சென்று தினசரி சந்தையில் தூய்மை பணி மேற்கொண்டனர். தாய் உள்ளம் சரவணக்குமார் வரவேற்றார், மன்ற உறுப்பினர் மூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com