பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி வடக்கிபட்டியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி வடக்கிபட்டியில் சனிக்கிழமை காலை அருகிலுள்ள வனப்பகுதியிருந்து காட்டெருமை ஒன்று ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளில் பயிர்களை சேதப்படுத்தியதாம்.
இதனால் பொதுமக்கள் கூடி காட்டெருமையை விரட்டியுள்ளனர். விவசாயத்தையே பிரதானமாக கொண்டுவாழும் இப்பகுதியில் இதுபோல் அடிக்கடி காட்டெருமைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டெருமைகளை அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.