அறந்தாங்கி அருகே வெள்ளிக்கிழமை இரவு வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்திய 2 மாட்டுவண்டிகளை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம் பறிமுதல் செய்தார்.
இவர் அறந்தாங்கி பகுதியில் ரோந்து சென்ற போது கோங்குடி பகுதியில் 2 மாட்டுவண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைகாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விராலிமலை: அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலை பகுதி கைவேலிப்பட்டி பகுதியில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.