படிப்பறிவு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் படிப்பறிவு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி  தலைவர் அ. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். முகாமில் படிப்பறிவின் அவசியம், மாணவர்கள் எளிமையாக கற்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ரோட்டரி செயலர் க. ஆறுமுகம், பள்ளித் தலைமையாசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதுபோல ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் , துர்க்கா மருத்துவமனை இணைந்து ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com