அன்னவாசல் அருகே அண்ணா பண்ணை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (செப்.26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் கா.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:
அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், காலாடிப்பட்டி, தச்சம்பட்டி, கீழக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது.