பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் முதல் பரிசை பெரிய குருவம்பட்டி அணியினர் பெற்றனர்.
கபடிப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணியினர் பங்கேற்று விளையாடினர். போட்டியில் முதல் பரிசை பெரிய குருவம்பட்டி அணியும், இரண்டாம் பரிசு திருச்சி அணியும், மூன்றாம் பரிசு வெங்களூர் அணி, நான்காம் பரிசு குறிச்சிப்பட்டி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் போட்டியை கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை மேலத்தானியம் கிராம மக்கள் செய்திருந்தனர்.