அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் மருத்துவ உலகம் செப்.25ஆம் தேதியை உலக மருந்தாளுநர் தினமாகக் கொண்டாடி வருகிறது. நிகழாண்டு சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவ அலுவலர் ச.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மருத்துவர் சி.அனிதா முன்னிலை வகித்தார்.
சித்த மருத்துவர் வி.பத்மாவதி, பல் மருத்துவர் சி.இளம்பரிதி உள்ளிட்டோர் பேசினர். மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மருந்தாளுநர்கள் ரா.உஷாராணி, ச.சித்ரா, சொ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டது. முடிவில், செவிலியர் கா.ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.