பிடாரி அம்மன் சித்திரைத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா  செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா  செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவரங்குளம் ஸ்ரீ பிடாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் காட்சி தந்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் பிடாரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். எட்டாம் திருநாளாக வரும் ஏப். 30ஆம் தேதி முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தவுள்ளனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com