வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லத்திராகோட்டையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வல்லத்திராகோட்டை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில், எல்கை அமைக்கப்பட்டு, பெரிய மாட்டுவண்டி, கரிச்சான் மாட்டுவண்டி, நடு மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி ஆகிய 4 பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற்றன. 
பெரிய மாட்டுவண்டி பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் தினையாகுடி பெரிய அய்யனார், சிவகங்கை கொத்தடி சீமான், தட்டாம்பட்டி அமர்நாத் ஆகியோரது மாட்டுவண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்தன. 
கரிச்சான் மாட்டுவண்டி பிரிவில் கலந்துகொண்ட  17 மாட்டுவண்டிகளில், தள்ளாம்பட்டி ஓம் பிரியா, பொன்பேத்தி மருதுபாண்டி, திருச்சி செந்தில்பிரசாத் ஆகியோரது மாட்டுவண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்தன. 
நடுமாட்டுவண்டி பிரிவில் பங்கேற்ற 15 மாட்டு வண்டியில் திருவாப்பாடி பெரியசாமி முதல் இடத்தையும், திருச்சி செந்தில்பிரசாத் 2 ஆவது இடத்தையும், பூக்கொல்லை காளிமுத்து ரீத்திஸ் 3 ஆவது இடத்தையும் பெற்றனர். பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவில் 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் பதனிக்குடி சிவசாமி மாட்டுவண்டி முதல் இடத்தையும், அம்மன்பேட்டை ராஜேஸ் 2 ஆவது இடத்தையும், பேராவூரணி ராஜா 3 ஆவது இடத்தையும் பெற்றனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com