தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை பாஜக கூட்டணிக்காக நிர்பந்திக்கிறது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். தேர்தல் தேதி அறிவித்தவுடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அனைத்துத் தலைவர்களும் இணைந்து ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பாஜக கூட்டணிக்காக அவசரப்படுகிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தமிழ்நாட்டில் நிர்பந்தித்து, பயமுறுத்தி கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று அதிமுகவுக்குள்ளேயே எதிர்ப்பு வலுவாக இருக்கிறது என்றார் அவர்.