புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (பிப். 16) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், நிஜாம் குடியிருப்பு, கீழ ராஜவீதி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர்,அசோக் நகர், கலீப் நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், போஸ் நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் அறிவித்துள்ளார்.