பேருந்து வசதி கோரி தூத்தூர் கிராம மக்கள் மறியல்

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சியில் பேருந்து வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சியில் பேருந்து வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதியில் இருந்து தூத்தூர் வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 2, 3 ஆண்டுகளாக பேருந்துகள் இயக்கப்படாமல் மாற்றுப்பாதையில் சென்று வந்தன. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட 
அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கொப்பனாபட்டி-- ஆலவயல் சாலைப்பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் தூத்தூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் தொடர்ந்து தூத்தூர் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கக்கோரி  பேருந்துகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com