தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் சார்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
விராலிமலையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு காமராஜர் நகரில் இருந்து பேரணியாக கடைவீதி வழியாகச் சென்று சோதனைச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த வீரர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் விராலிமலை, கொடும்பாலூரில் இயங்கி வரும் ரானே தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள், அலுவலர்கள் நூற்றுக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.