பொன்னமராவதி அருகே ஆலவயலில் காவிரி குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகக் குடிநீர் வெளியேறி வருகிறது.
ஆலவயல் - கண்டியாநத்தம் பிரிவு சாலை அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நீர் தேங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் குடிநீர் தினமும் வீணாகிக்கொண்டிருக்கிறது. எனவே இக்குழாய் உடைப்பினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.