புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் விஜயரகுநாதபுரம் பாரதி நகரில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
கல்லூரி தாளாளர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, எஸ். சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைக்குறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப. செல்வராஜ் முகாமைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழுவின் முன்னாள் தலைவர் வி.சி. ராமையா தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
முகாமில், கல்லூரியின் துணை முதல்வர் மா. குமுதா, கவிஞர் மு. பாலசுப்பிரமணியன், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் நா. பூர்ணிமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெ. செளந்தர்யா வரவேற்றார். திட்ட அலுவலர் சி. அம்பிகா நன்றி கூறினார்.