புதுக்கோ ட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா வேளாண் கல்லூரியில் தேசிய தாய்மொழிகள் தின விழா மற்றும் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இந்த விழாவுக்கு மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி. உதயகுமார் தலைமை வகித்தார்.
வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் பி.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவ-மாணவிகளுக்கிடையே கவிதை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, ஓவியப்போட்டி மற்றும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை கண்டறியும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.