புதுக்கோட்டை

தாய்மொழிகள் தின போட்டிகள்

DIN

புதுக்கோ ட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா வேளாண் கல்லூரியில் தேசிய தாய்மொழிகள் தின விழா மற்றும் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இந்த விழாவுக்கு மதர் தெரசா  கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி. உதயகுமார் தலைமை வகித்தார். 
வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் பி.மகேந்திரன்  சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவ-மாணவிகளுக்கிடையே கவிதை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, ஓவியப்போட்டி மற்றும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை கண்டறியும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT