தேசிய கைப்பந்துப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி டி. சுபாஷினி ஜன. 4 முதல் 8 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய கைப்பந்துப் போட்டியில் பங்கேற்றார்.
இதில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற சுபாஷினிக்கு மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ், ரூ. 2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் மாணவி சுபாஷினி மூன்றாமிடம் பிடித்துரூ. 1 லட்சம் வென்றது குறிப்பிடத்தக்கது. மாணவி சுபாஷினியை பள்ளியின் தாளாளர் கே. ரகுபதி சுப்பிரமணியன், முதல்வர் ஜி. ரேவதி உள்ளிட்டோர் பாராட்டினர்.