சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் இருவர் சனிக்கிழமை


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி அருகிலுள்ள கருங்குலிக்காட்டைச் 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த பேராவூரணி மதியழகன் மகன் கார்த்தி (23), சேதுபாவாசத்திரம் கார்மேகம் மகன் தர்மராஜ் (20) ஆகிய இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com