புதுக்கோட்டையில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தியாகிகள் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம்


தியாகிகள் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் க. செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலவைவர் ஏ. ராமையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. சண்முகம் தலைமை வகித்தனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் ஏ. பழனிசாமி, சிஐடியு மாவட்டச் செயலர் க. முகமதலிஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com