வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் சனிக்கிழமை மாலை வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் சனிக்கிழமை மாலை வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
பொங்கல்திருநாளையொட்டி, வடகாடு பரமநகரில் நண்பர்கள் குழு சார்பில் இப்போட்டி நடத்தப்பட்டது. சுமார் 55 அடி உயரமுள்ள மரம் நடப்பட்டு அதன் மீது வழுக்கும் தன்மைக்காக 10 லிட்டர் எண்ணெய் பூசப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்க ஆலங்குடி,பனங்குளம், பாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 -க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்திருந்தன.
தொடக்கத்தில் தலா 6 பேர் வீதம் மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். சில சுற்றுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கை 8,10 ஆகவும் உயர்த்தப்பட்டது. அணியினர் ஏறுவதும் சரிவதுமாகவே இருந்தனர். போட்டி தொடங்கி சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பனங்குளம் அணியினர் ஏறி இலக்கை தொட்டு வெற்றி பெற்றனர். 
இவர்களுக்கு பரிசாக ரூ.21,331 வழங்கப்பட்டது. ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழக மக்கள் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com