விராலிமலை அருகே அனுமதியின்றி கள்ளச்சந்தையில் மது விற்ற 2 பேரை விராலிமலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை சுற்றுப் பகுதியில் அரசு மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மது விற்றதாக விராலிமலை அருகேயுள்ள பாட்னாப்பட்டி செல்லத்துரை (45), சின்னப்பழனிப்பட்டி சுப்பையா (56) உள்ளிட்ட 2 பேரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.