வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இதுவரை அறிவிக்காத நிலையில் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் தனது கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் களம் அமைக்க தொடங்கியதோடு முதல் பணியாக விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், மலைக்குடிபட்டி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அலுவலகம் அமைத்து தினமும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.