லஞ்சம் வாங்கிய நிலஅளவையருக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறைத்

புதுக்கோட்டை அருகே நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மச்சுவாடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் குணம் (56). கடந்த 2013ஆம் ஆண்டு கந்தர்வக்கோட்டை பகுதியில் நில அளவையராகப் பணியாற்றினார். அப்போது, கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த தாண்டவமுத்து மனைவி பானுமதி என்பவர் தனது நிலத்தை அளக்க குணத்தை நாடியுள்ளார்.
நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் அவர். லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத பானுமதி, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸாரின் அறிவுரைப்படி லஞ்சப்பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் நிலஅளவையர் குணத்தைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை     தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் நிறைவில், தலைமைக் குற்றவியல் நடுவர் அகிலா ஷாலினி புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும், பணியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com