350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

அறந்தாங்கி குதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 350 கிலோ பிளாஸ்டிக் பைகள் நகராட்சிஅலுவலர்களால்

அறந்தாங்கி குதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 350 கிலோ பிளாஸ்டிக் பைகள் நகராட்சிஅலுவலர்களால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ஆர். வினோத், சுகாதார அலுவலர் த. முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் எஸ். சேகர்  மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆசைத்தம்பி, செல்வேந்திரன், ஆத்மநாதன், சுந்தர்ராஜன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கடையில்  ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ  பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com