புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமயம் அரசு மருத்துவமனையின் ஆற்றுப்படுத்துநர் என். கவிதா இதில் கலந்து கொண்டு விளக்கினார். மாவட்ட எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் ராமசாமி கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினார். ஆங்கிலத் துறைத் தலைவர் சி. ஹரிராம்ஜோதி கருத்துரை நிகழ்த்தினார்.