புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூர், குன்றாண்டார்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.
கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன், தொண்டரணி மாநிலத் துணைச் செயலர் சுப. சரவணன், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் கீரைத் தமிழ்ராஜா, காங்கிரஸ் சார்பில் வி. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடராஜன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் தங்கவேலு, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அழகுவேந்தன் உள்ளிட்டோரும் பேசினர்.