இலுப்பூர் தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி இலுப்பூர், மேட்டுப்பட்டி, செட்டிதெரு, சிவன் கோவில்தெரு, கொடிகால்தெரு, சௌராஸ்ட்ரா தெரு, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, மாத்திராம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெண்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீஸார் செய்தனர்.