பேராவூரணி, பாபநாசத்தில் விஏஓ-க்கள் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இணையதள வசதிகளை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அதிகாரத்தை பறிக்கக் கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மாவட்ட மாறுதல்  வழங்கிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலர் கல்வித் தகுதியை பட்டப்படிப்பு ஆக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி வட்டாட்சியர்  அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். பொருளாளர் மருததுரை நன்றி கூறினார்.
பாபநாசத்தில்... வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தின்  பாபநாசம் வட்டக் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ராஜேஷ்  தலைமை வகித்தார்.
வட்ட செயலாளர் காசிநாதன், வட்டப் பொருளாளர் பத்மநாபன், துணைத் தலைவர் சதீஷ்குமார், துணை செயலாளர் சிவபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com