பட்டுக்கோட்டையில் கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
பட்டுக்கோட்டை சிவகொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சகோதரர்களான சதீஷ்குமார் (22), ரமேஷ்குமார் (20), தினேஷ்குமார் (18), இவர்களது உறவினர் அய்யதுரை (19) ஆகியோரது வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்ததுடன், ஆறுதல் கூறினார். தொடர்ந்து, நிவாரண உதவித்தொகை வழங்கினார்.இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே அணைக்காட்டில் தென்னமரம் விழுந்ததில் இறந்த ஜெயலட்சுமி (14) வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், நிவாரண உதவித்தொகை வழங்கினார்.