தஞ்சாவூர் அருகே மினிவேன் கவிழ்ந்து 31 பேர் காயம்

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மினி வேன் கவிழ்ந்ததில் 31 பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மினி வேன் கவிழ்ந்ததில் 31 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், கரைவெட்டிபுதூர், முடிகொண்டான், விரகாலூர் ஆகிய கிராமங்களில் இருந்து தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மன்பேட்டைக்கு விவசாயப் பணிக்காக மினி வேனில் 31 பேர் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனர். விளாங்குடி - திருவையாறு சாலையில் கஸ்தூரிபாய் நகரில் வந்தபோது குறுக்கே நாய் வந்ததையடுத்து, பிரேக் அடிக்கப்பட்டதில் மினி வேன் கவிழ்ந்தது. 
இதில் காயமடைந்த 31 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருவையாறு போலீஸார் விசாரித்தனர். இதனிடையே, தகவலறிந்த அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com