தென்னை பாதிப்பு கணக்கெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவில் தென்னை மரங்கள் விழுந்துள்ளன. 
இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. உள்ளாட்சி, மின்சாரம், வருவாய், வேளாண் துறைகளின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் வந்தவுடன் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் துரைக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com