தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவில் தென்னை மரங்கள் விழுந்துள்ளன.
இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. உள்ளாட்சி, மின்சாரம், வருவாய், வேளாண் துறைகளின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் வந்தவுடன் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் துரைக்கண்ணு.